தமிழ் வலைப்பதிவுகள், தள ஓடைகள்

சு. வில்வரெத்தினம் எழுதிய ஆங்கிலப் பாடல்..

திருக்கோணமலையில் SDRO நிறுவனத்துக்காக ஜஸ்டின் இன் இசையில் சு. வில்வரெத்தினம் வரிகள் எழுதியிருந்தார்.

SDRO வினால் ஒழுங்குபடுத்தப்பட்ட "சமாதான வேண்டுதல்" நிகழ்வுக்காக எழுதப்பட்டதே இது

Powered by eSnips.com


இயற்கையின் மடியினில் அமைதியாத் துயிலும் இனிமை எமக்கு வேண்டும்
இந்த உலகம் போர் இல்லாத அமைதித் தோட்டமாக வேண்டும்

பூரணமே பரிபூரணமே
போரால் அழிந்தது போதும் பரிபூரணமே
உந்தன் அருளெனும் நதியினில் நீராடி சிலிர்த்தெழ வேண்டும்

அமைதி வழியில் அமைந்தால் வாழ்வு இனியது என்போம்
தெளிந்த நீரோடையாய் திகழ்ந்தால் அது அழகியதென்போம்
பூரண அழகு பொழிவது மெய் அறிவிலிருந்து
பூரண உலகு மலர்வது பிரபஞ்ச ஒழுங்கிலிருந்து


மேலேயுள்ள சு . வி யின் பாடல் வரிகளின் மூலமாக அமைந்தது அவர் "சமாதான வேண்டுதல்" இற்காக எழுதிய கீழ்வரும் பாடலே..
பின்னர் சில காரணங்களால் இப்பாடலின் சுருக்கப்பட்ட வடிவமே இசையமைகப்பட்டிருக்கிறது.

புதிய விடுதலை


இயற்கையின் மடியில் அமைதியாகத் துயிலும் இனிமை எமக்கு வேண்டும்
இந்த உலகம் போர் இல்லாத அமைதித்தோட்டம் ஆக வேண்டும்

அமைதி வழியில் அமைந்தால் வாழ்வு இனியது என்போம்
தெளிந்த நீரோடையாய்த் திகழ்ந்தால் வாழ்வு அழகியது என்போம்
பூரண அழகு பொழிவது நிரந்தர மெய்யறிவிலேயிருந்து
பூரண உலகு மலர்வது பிரபஞ்ச ஒழுங்கின் லயத்திலிருந்து
வேண்டும் எமக்கோர் பூரண உலகு இனங்களின் வேறுபாடகன்று

இறைவா! ஓ இறைவா! எங்கும் நிறைந்த பரிபூரணமே
உமது பேரியல்பின் கீழ் எம்மைப் பாதுகாத்தருள்க

சமயங்கள் யாவும் நிறுவிய அருளாளர் நிறைவாக்கம் செய்யவே வந்தனர்
நிறைவாக்கம் என்பது புதுயுகத்திற்கமைவாய் மனங்களைப் பக்குவம் செய்வது
நேசம் கொள்க என்றுரைத்தார் யேசு புதுயுக நேயம் கொள்வோம்
புத்தர் மும்முறை இலங்கை வந்தார் ஓர் இனப்போரை நிறுத்திச்சென்றார்
போர் வேண்டாம் மேலும் போர் வேண்டாம் போரால் இத்தேசம் குருடாகும்
இறைவா! ஓ இறைவா! குருட்டுத்தனத்திலிருந்தெமைப் பதுகாத்தருள்வாய்


இப்பாடலின் ஆங்கிலவாக்கதையும் அவரே செய்திருக்கிறார்.


New Liberation

We have a silent sleep on the Nature lad
We want have a warless world as a peaceful garden

Life is more beauty when the making with peacefulness
Life is more delightful when man mind with calmness
Intergral life blooms from eternal wisdom
Intergral world blooms from the rhythm of cosmic since
We want rhythmic world out making any differences

Oh my lord! Oh my lord! Thou art all - pervading truth
Protect us protect us to live thy infinite gracefulness

All the religious founders came fulfill not to destroy
fulfillment is to re-create to fit to be new born age
Jesus promised that golden age to make us cosmic lovers then
Lord Buddha came to Lanka stop war ethnic groups
No more wars! No more wars! war make this land a blind
Oh lord! Oh my lord! Protect us from this blindness

(எனக்குக் கிடைத்த பிரதியில் எதுவித மாற்றங்களும் செய்யாமலேயே இக்கவிதையை இங்கே தந்திருக்கிறேன். தட்டெழுத்துப்பிழைகள் கூடத் திருத்தப்படவில்லை)


இக்கவிதையின் மின்நகலைத் தேடியெடுத்தும் தகல்வல்கள் தந்தும் உதவிய நண்பன் சத்தியனுக்கு நன்றிகள்
-- மு. மயூரனின் "ம்..." வலைப்பதிவின் செய்தியோடை வழியாகப் பெறப்பட்டது. This work is licensed under a Creative Commons Attribution-Share Alike 3.0 License. --

தென்கிழக்குப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கத்தின் நூல் அறிமுக விழா. கொழும்பில்.

தென்கிழக்குப் பல்கலைக் கழகத் தமிழ்ச்சங்க வெளியீடான மூன்று கவிதை நூல்கள் அறிமுக விழா நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெறவுள்ளது.

ஆர்வமும் துடிப்பும் கொண்ட விழா ஏற்பாட்டாளர்களான தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.




-- மு. மயூரனின் "ம்..." வலைப்பதிவின் செய்தியோடை வழியாகப் பெறப்பட்டது. This work is licensed under a Creative Commons Attribution-Share Alike 3.0 License. --

உபுண்டு 8.04 : தமிழர்களே தற்போதைக்குத் தள்ளிப்போடுங்கள்!

உபுண்டுவின் புதிய பதிப்பான 8.04 தற்போது வெளிவந்துவிட்டது.

அவசியமான சிறப்பான பல மேம்பாடுகளுடன் இப்புதிய பதிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.


ஆனால் தமிழ்ப்பயனர்களான எம்மை இப்பதிப்பு ஏமாற்றிவிட்டது. தமிழ் எழுத்துக்கள் எந்த எழுத்துருவை மாற்றினாலும் தெளிவாகத்தெரியாத புது பிரச்சினை ஒன்று இப்பதிப்பில் இருக்கிறது.

பிரச்சினைக்கான காரணத்தைக் கண்டறிவதில் தீவிர ஈடுபாடு காட்டி வருகிறோம்.

காரணம் கண்டறியப்பட்டு தீர்வு கண்டடையப்பட்டதும் தமிழப்பயன்பாட்டுக்கு ஏற்றவண்ணம் இப்புதிய பதிப்பினை உங்களுக்காக மாற்றியமைத்துத்தரும் வகையில் புதிய தபுண்டு வெளியாகும்.

அதுவரை தபுண்டு வெளியீடும் தள்ளிப்போடப்பட்டுள்ளது.

ஆகவே, தமிழ், இணையப்பயன்பாட்டை முக்கியமாகக்கருதும் தமிழ்ப்பயனர்கள் இப்போதைக்கு உங்கள் உபுண்டு இயங்குதளத்தை 8.04 இற்கு இற்றைப்படுத்த வேண்டாம் எனப்பரிந்துரைக்கிறேன்.

7.10 இப்போதைக்கு மிகச்சிறப்பாகப் பணியாற்றுகிறது.


இப்பரிந்துரை உபுண்டு குடும்பத்தின் ஏனைய வழங்கல்களான குபுண்டு, எடியுபுண்டு, எக்ஸ் உபுண்டு ஆகியவற்றுக்கும் பொருந்தி வருவதே.


இப்பிரச்சினை தொடர்பான தகவல்களும் மேலதிக செய்திகளும் பின்னூட்டம் வழியாக தொடர்ச்சியாக இற்றைப்படுத்தப்படும்.

P.W.D அல்லது பாதையில் வேலை செய்யும் தமிழன்

கட்டுகின்ற பாலங்கள் இடிந்து விழும்போதும் கட்டிடத்தூண்களை எழுப்புவதற்கு அடித்தளம் அமைக்கும்போதும் வெள்ளைக்காரர்களுக்குக் கங்காணிகள் ஒரு "மந்திரம்" சொல்லிக்கொடுத்தார்கள். கொடிய வெள்ளைக்காரர்கள் முதலில் அந்த மந்திரம் மூட நம்பிக்கை என்று சொன்னார்கள். பின்னர் தமது நோக்கங்கள் நிறைவேற எதையும் செய்வதற்கு தயாராகினார்கள்.

மலேஷியத்தமிழர்களை பலவந்தமாக ஜப்பானியர்கள் இழுத்துச்சென்று ரயில் பாதை அமைத்தார்கள். மிகக்கொடூரங்களைச் சந்தித்த அந்த மக்கள், மலைக்காடுகளில் அகால மரணங்களால், ஆயிரமாயிரம் பேர் புதையுண்டுபோன வரலாறுகள், இன்று மெல்ல மெல்ல மனிதாபிமானிகளால் வெளிவரத்தொடங்குகின்றன.


இம்முறை தாயகம் சஞ்சிகையில் வெளிவந்திருந்த சிறுகதை ஒன்று.
இதனைப்படித்தவுடன் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விருப்பமாயிருந்தது.

தேசிய கலை இலக்கிய பேரவையின் தாயகம் சஞ்சிகைக்கு மிக்க நன்றிகள்.







-- மு. மயூரனின் "ம்..." வலைப்பதிவின் செய்தியோடை வழியாகப் பெறப்பட்டது. This work is licensed under a Creative Commons Attribution-Share Alike 3.0 License. --

பெங்குயின்கள் பறக்கப்பழகிய நாளொன்றில்...

The truth behind the WTO

Youtube நிகழ்படங்களை மேசைத்தளத்துக்குக் கொண்டுவரும் Totem Plugin

கூகிள் தனது app engine ஐ அறிவித்திருக்கிறது. கணினி வலையமைப்புக்களின் போக்கு அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்கிறது. வலைப்பக்கங்கள் செயலிகளாக மாறிக்கொண்டிருக்க்கின்றன. ஆனால் அதே நேரத்தில் உங்கள் கணினிச்செயலிகள் வலையோடு தம்மை இறுகப்பிணைத்துக்கொள்ளவும் ஆரம்பித்துவிட்டன.

இந்த அடிப்படையில் அண்மையில் வெளிவந்த க்னோம் 2.22 மேசைச்சூழலின் புதிய முன்னேற்றங்களில் ஒன்றுதான் இந்தச் சொருகுபொருள் (plugin).

உபுண்டு, ஃபெடோரா போன்ற வழங்கல்களில் இயல்பிருப்பாக வந்து தொலைக்கிறது என்பதைத்தாண்டி இந்த டோட்டம் இயக்கியை நான் பாட்டுக்கேட்கவோ படம் பார்க்கவோ பயன்படுத்துவதில்லை.

ஆனால் இந்த youtube சொருகுபொருளோடு தன்னைக்கொஞ்சம் திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறது totem.


உங்கள் totem player இனை திறந்து வைத்துக்கொண்டு அதில் youtube நிகழ்படங்களைத்தேடி, அதிலேயே பார்க்கக்கூடிய வசதியை இது தருகிறது. கூடவே related videos, search results எல்லாவற்றையும் சிறு படங்களாகப் பக்கப்பட்டையில் காண்பிக்கிறது.

உலாவியைப்பயன்படுத்தி youtube தளத்திற்குப்போய் படம்பார்ப்பதை விட இந்த வழிமுறை கொஞ்சம் ஆர்வமூட்டும்படியாக இருப்பதென்னவோ உண்மைதான்.
கூடவே வலைச்செயலிகளை விட, ஒரு மேசைத்தள media player என்ற வகையில் பெறக்கூடிய கூடுதல் வசதிகளையும் பெற முடிகிறது.


இயல்பிருப்பாக வரும் சொருகுபொருளில் வழுக்கள் உண்டு. வழு நீக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட இந்தச்சொருகினை பெற்றுச் சொருகிக்கொள்ளுங்கள்.

இம்மென்பொருள் கட்டற்றது. பைத்தான் மொழியில் எழுதப்பட்டது.

இதனை மேலும் சீர்படுத்தச் சில யோசனைகள்:

1. youtube மட்டுமல்லாது ஏனைய நிகழ்படப்பகிர்வுச் சேவைகளையும் உள்ளடக்கலாம்.

2. youtube இனது சொல்திருத்தியைப் பயன்படுத்ததக்கதாக்கலாம்.

3. தமிழில் "தமிழ்" என்று தேடினால் "tamil", "thamiz" போன்ற தேடல் முடிவுகளையும் தரக்கூடியவண்ணம் மாற்றியமைக்கலாம்.

4. தரவிறக்க வசதியினைச் சேர்க்கலாம்.

5. நேரடியாக எமது நிகழ்படங்களைத் தரவேற்றும் வசதி இருந்தால் சிறப்பு.

6. பின்னூட்டங்களைப்படிக்க, அனுப்பக்கூடிய வசதி.

இந்த வசதிகளை வழங்க பகிர்வுத்தளங்களின் API ஒத்துழைக்கவேண்டும்.

முயன்றுபாருங்கள்.

புதிய க்னோம் தற்போது புதிதாக வந்த வழங்கல்களில் காணப்படுகிறது. அடுத்து வரும் உபுண்டுவும் இதனையே கொண்டிருக்கிறது.

பயங்கரவாதம், மதம், ஊடகம் : அனிதா பிரதாப்பின் உரை

இலங்கையில் நடந்து வரும் ஆயுதப் போராட்டத்தையும், ஆப்கானிஸ்தானில் தாலிபன் அமைப்பினரின் அடக்குமுறையையும் களமுனைக்கு சென்று செய்தி சேகரித்தவர் அனிதா பிரதாப். இந்தியாவில் அனிதா பிரதாப் போன்று போர் முனைக்கு சென்று செய்தி சேகரித்த செய்தியாளர்கள் மிகவும் குறைவு. அதுவும் தற்போதைய இந்திய வெகுஜன ஊடகங்களில் அனிதா போன்ற பத்திரிக்கையாளர் எவரும் இல்லை என்பதை உறுதியாக சொல்ல முடியும். ஊடகங்கள் என்.ராம், வாஸந்தி,

ஹோகனேக்கல், நன்னீர் அரசியல், சில கேள்விகள்.

இந்தக் காவிரிப்பிரச்சினை, ஹோகனேக்கல் பிரச்சினை எல்லாம் வணிகத் திரைத்துறைக் கலைஞர்களின் தலையீடுகளுடன் மிகப்பிரபலமாகிப்போய்விட்டன.

இதில் பெரும்பாலும் தமிழ்நாடு சார்பான செய்திகளே, ஊடகங்கள் வழியாக மட்டும் இப்பிரச்சினையை அவதானித்துக்கொண்டிருக்கும் எனக்குத் தரப்படுகின்றன.

Sometimes in April படத்தில் ஒரு வசனம் வரும் "Ok, but.. Who are the good guys?" என்று. அப்படித்தான் கேட்கவேண்டும்போலிருக்கிறது. ஆனால் என்னிடமுள்ள இந்தக்கேள்வி, கன்னடக்காரர்களா தமிழ்நாட்டுக்காரர்களா good guys என்பதை அடிப்படையாகக்கொண்டதல்ல.

1. ஹோகனேக்கல் பகுதியில் நிறுவப்படவுள்ள தமிழக அரசின் குடிநீர்த்திட்டத்துக்கு ஜப்பான் பணம் கொடுக்கிறது. இதில் எதிர்காலத்தில் ஜப்பானின் பங்கு என்னவாக இருக்கப்போகிறது?

2. இப்போ உள்ளதுபோல நதிநீர் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்தால் , ஏதாவது பிரச்சினை வந்தால் சுப்ரீம் கோர்டில் வழக்குப்போடலாம். எல்லோரும் கேட்பதுபோல தேசியமயமாக்கி விட்டால் இப்படி வழக்குப்போட முடியாது. வரலாற்றில் நிறையத்தடவைகள் மத்திய அரசு தமிழ்நாட்டை ஏமாற்றியிருக்கிறது. நாளைக்கு இந்த விசயத்திலும் ஏமாற்றினால் என்ன செய்வது? அதை இப்பவே செய்ய முடியாதா?

3. 21ம் நூற்றாண்டின் உலகளாவிய நன்னீர் அரசியலுக்கும் இப்போது அடிக்கடி வெடிக்கும் இந்திய மாநிலங்களுக்கிடையேயான நன்னீர் முரண்பாடுகளுக்குமிடையேயான தொடர்புகள் என்ன? (நன்னீரை நீலத்தங்கம் என்கிறார்கள். எதிர்கால உலகின் போர்களின் அடிப்படை நன்னீராகத்தான் இருக்கப்போகிறது என்கிறார்கள். இதை வைத்துத்தான் கேட்கிறேன்)

4. நதி நீரைத் தேசிய மயமாக்கு என்ற கோரிக்கை எழுப்பப்பட வேண்டும் என்று எவராவது மறைமுகமாக எதிர்பார்க்கின்றனரா?

5. நதிநீரைத் தேசியமயமாக்கி விட்டால், நாளைக்கு நதிநீரைத் தனியார் மயமாக்கும்போது எழக்கூடிய சிக்கல்களை முன்கூட்டியே இலகுவாகத் தீர்த்துவிடலாம் என்ற எண்ணம் எவருக்கும் இருக்கிறதா? (தேசியமயமாக்கற் பொருளாதாரக்கொள்கை பின்னர் எவ்வாறு யாருக்கெல்லாம் சேவகம் செய்தது என்பதை நினைவிற்கொள்க)

6. நதிநீர் இணைப்பு, நதி நீர் தேசிய மயமாக்கல் இரண்டும் இந்தியாவின் வளமான எதிர்காலத்துக்கான வழிமுறைகளாகப்போதிக்கப்பட்டு மிகக்கவர்ச்சிகரமாகப் பரப்புரைக்கப்படுகிறதே, இவையிரண்டும் இந்திய மக்களுக்கு நன்மைதருமா அல்லது வேறேதாவது நிகழ்ச்சிநிரலின் எதிர்பார்ப்புக்களா?

7. சேது கால்வாய்த்திட்டத்துக்குள் ராமன் வந்ததுபோல, இந்தப்பிரச்சினையிலும் தமிழர் - கன்னடர் முரண்பாடு தூக்கிக்கொண்டாடப்படுவது அடிப்படைப்பிரச்சினையிலிருந்து கவனத்தைத் திசை திருப்பும் சதிவேலையா?

தொலைக்காட்சி, இணையத்தளங்கள் வாயிலாக மட்டுமே உங்கள் நன்னீர்ப்பிரச்சினையை அவதானித்துவரும் ஓர் ஈழத்தமிழனுள் எழுந்த கேள்விகள் இவை.

இதற்கான பதில்களை இப்பிரச்சினைக்கு அண்மையில் இருக்கும், இப்பிரச்சினையின் அரசியலை அணுகி அவதானிக்கும், மக்கள் நிலைச்செயற்பாடுகளில் ஆர்வம் கொண்டிருக்கும் அன்பர்கள் மட்டுமே மிகத்தெளிவாகத்தர முடியும்.

கடந்த இரு நாட்களாக இந்தப்பின்னணி அரசியல்கள் குறித்து ஏதேனும் பதிவுகள் வருமா என்று பார்த்துக்கொண்டிருந்தேன்.

கர்நாடகாவா தமிழ்நாடா என்பதைத்தாண்டி, திரையுலகத்தினரின் அதிரடிப்பேச்சுக்கள் என்பதைனைத்தாண்டி, தமிழுணர்வு என்பதைத்தாண்டி என்னுள் எழுந்த கேள்விகளுக்கு பதில்கள் கிடைக்கவில்லை.

தமிழ்சசி, தமிழரங்கம் போன்ற பதிவுகளில் கூட இப்பிரச்சினை பற்றிய அலசல்களைக் கொஞ்சம் எதிர்பார்த்தேன்..

வெங்கட் சொன்னதுபோல எசப்பாட்டுக்களை எதிர்பார்க்கிறேன் :-)

மேலும் படிக்க:

இந்தியா ஆறுகளுக்கு வந்தது பேராபத்து - தமிழரங்கம்
-- மு. மயூரனின் "ம்..." வலைப்பதிவின் செய்தியோடை வழியாகப் பெறப்பட்டது. This work is licensed under a Creative Commons Attribution-Share Alike 3.0 License. --

காலத்தை வென்று நிற்கும் கீதை - காலைச்செய்தியாய் ஒரு கவிதை.

இன்றைக்கு காலை எழுந்தவுடனேயே சுவையான செய்தி ஒன்று கண்ணில் பட்டது.

ஈராக், ஆப்கான் செல்லும் பிரிடிஷ் படையினருக்கு இந்துக் குரு ஒருவரால் பகவத் கீதை உபதேசிக்கப்பட்டிருக்கிறது.

"I tell them, 'God has given you an opportunity to protect your country and maintain peace in the world'. They need to know they are not killing anybody but just performing a duty,"


என்கிறார் அந்தக் குரு.
ஆகா... ஆகா..

இன்னும் சொல்கிறார்

"Duty is our priority. It's our karma, and we have to face it."


இந்துப்புராணங்களினதும் அவற்றின் அடியோடும் அதிகாரக்கூட்டத்துக்கு சார்பான கழிசடைகெட்ட தத்துவத்திரட்டுக்களினதும் முகத்திரை கிழிக்க எத்தனையோ பேர் எழுதிய பேசிய எத்தனையோ விளக்கங்களை படித்தும் கேட்டுமிருக்கிறேன்.

ஆனால் இந்தச்செய்தியை விட இவ்வளவு சுருக்கமாகவும் கவித்துவமாகவும் சுருக்கென்றும் பகவத் கீதையின் உண்மை முகத்தை வேறெதுவும் தோலுரித்துவிடவில்லை.

இன்றும் வாழ்கிறது பகவத் கீதை...
இன்றும் அது தேவைப்பட்டுக்கொண்டே இருக்கிறது...

அன்று தேவைப்பட்ட அதே கூட்டத்தின் சந்ததிகளுக்கு...

கவிதை... கவிதை...
-- மு. மயூரனின் "ம்..." வலைப்பதிவின் செய்தியோடை வழியாகப் பெறப்பட்டது. This work is licensed under a Creative Commons Attribution-Share Alike 3.0 License. --